நொடி பொழுதில் நடந்த பயங்கரம் - பயணிகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து - ஸ்பெயினில் அதிர்ச்சி

x

ஸ்பெயினில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பேருந்து ஒன்று விழுந்த‌தில், 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பிரதேசமான காலிசியாவில், லெரெஸ் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்த‌து. 130 அடி ஆழத்தில் விழுந்து, வேகமாக ஓடும் நீரில் பேருந்து சிக்கியதால், பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சென்ற மீட்புப்படையினர், ஓட்டுநர் மற்றும் பெண் பயணியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். அதே நேரத்தில், 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மேலும் 4 பேரை மீட்புப்டையினர் தேடி வருகின்னர்.


Next Story

மேலும் செய்திகள்