ஆற்று நீரில் மூழ்கிய மருமகன்... காப்பாற்ற முயன்ற தாய்மாமனும் பலியான பரிதாபம் - விடுமுறைக்காக வந்தபோது நடந்த சோகம்

x

நாச்சிகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது அக்கா மகன் நந்த குமார், 12ம் வகுப்பு படித்துவரும் நிலையில், விடுமுறைக்காக தாய் மாமன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனிடையே ஆற்றில் குளித்து கொண்டிருந்த அவர், நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரைக் காப்பாற்ற சண்முகம் முயற்சி செய்தபோது, இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே விடுமுறைக்காக வந்த பள்ளி மாணவனும், தாய்மாமனும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்