பீரோவில் இருந்து வந்த உஷ்..உஷ்.. படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

x

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இரு வேறு இடங்களில் இருந்து 2 நல்ல பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு விடுதியில், பீரோவில் பாம்பு இருப்பதாக பாம்பு பிடிக்கும் நபர் பாண்டியனுக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். அந்த விடுதிக்குச் சென்ற பாண்டியன், பீரோவில் புகுந்திருந்த 2 அடி நீளமுள்ள நல்ல பாம்பைப் பிடித்து, வனப்பகுதியில் விட்டார். இதேபோல், சீர்காழி சிங்காரத்தோப்பில் சுந்தரமூர்த்தி என்பவரின் வீட்டின் பின்புறம் மரப்பலகையில் புகுந்திருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பையும் நீண்டநேர போராட்டத்துக்குப் பின் அவர் வனப்பகுதியில் விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்