தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 15,000 லி. கலப்பட பால் கடத்தல் - பால்வள மேம்பாட்டுத்துறை அதிரடி

x

தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த 15 ஆயிரம் லிட்டர் பாலை கேரள பால்வள மேம்பாட்டுத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கேரளாவின் ஆரியங்காவு சோதனை சாவடி வழியாக தமிழகத்தில் இருந்து கலப்பட பால் கடத்தப்படுவதாக கேரள மாநில பால்வள மேம்பாட்டுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் தென்காசியில் இருந்து பந்தளம் நோக்கி பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரியை சோதனையிட்டதில், பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக கலப்பட பாலை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்