தேசிய நெடுஞ்சாலையில் வியாரிகளிடம் 100 கிலோ வெள்ளிக்கட்டிகள் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

x

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ வெள்ளி கட்டிகள் கடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓமலூர் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி வியாரிகளிடம் இருந்து 100 கிலோ வெள்ளி கடத்தப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இதுவரை வெள்ளிக்கட்டிகள் கைப்பற்றப்படாத நிலையில், கேரளாவை சேர்ந்த விஜில், நிதிஸ் நிதின், அசிஸ் மற்றும் சிராஜுதீன் ஆகிய மேலும் நான்கு பேரை போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்