ஆடை பட்டன்களின் கடத்தப்பட்ட போதைப்பொருள்... வளைத்து பிடித்த அதிகாரிகள்

x

ஆடை பட்டன்களின் கடத்தப்பட்ட போதைப்பொருள்... வளைத்து பிடித்த அதிகாரிகள்

மும்பை விமான நிலையத்தில் ஆடை உள்ளிட்ட பொருட்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பையின் சர்வதேச விமான நிலையத்திற்கு கென்யா மற்றும் எதோபியாவில் இருந்து வந்த விமானங்களின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் இரு விமானத்தில் இருந்து வந்த இருவரின் உடமைகளிலும் 47 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் மற்றும் ஹெராயின் கடத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்