வீட்டுப்பாடம் எழுதாத 4ம் வகுப்பு மாணவி - ஆசிரியை செய்த காரியம்..

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசுப்பள்ளியில், ஜெயபாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் வீட்டுப்பாடம் எழுதாதன் காரணமாக, 4-ஆம் வகுப்பு சிறுமியின் கையில் ஜெயபாரதி குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது.


கையில் காயமடைந்த சிறுமி மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.


இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்