"கட்ட பஞ்சாயத்து போல பேசக்கூடாது" - ஆவேசமடைந்த விவசாயிகள்

x

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை தூக்கி வீசி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை பார்த்து, அரசியல் கட்சிகள் போலவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைப் போலவும் பேசக்கூடாது என்று கூறினார். இதைக்கேட்டு ஆவேசம் அடைந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், தங்களின் மனுக்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இருக்கை அருகில் சென்று, கோரிக்கை மனுக்களை வீசிவிட்டு விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்