அதிமுக பகுதி பொறுப்பாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை... கூட்டணி குறித்து 2-3 நாட்களில் அறிவிப்பு

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து, 2 - 3 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுகவின் பகுதி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி செங்கோட்டையில் எதிரொலிக்கும் எனவும், தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து 2-3 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்