50 ஆயிரம் ரூபாய் பண மாலையுடன் காட்சியளித்த செல்வ விநாயகர்

x

திருவண்ணாமலையில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 50 ஆயிரம் ரூபாய் பண மாலையுடன் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அங்குள்ள, நகரப் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், வேங்கிக்கால் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வடிவத்திலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், 50 ஆயிரம் ரூபாய் பண மாலையுடன் செல்வ விநாயகரும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்