அண்ணாமலைக்கு சவால் விட்ட சீமான்

x

அனைத்தையும் ஆதாரத்துடன் பேசுவதாக கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதுவரையில் ஜிஎஸ்டி மூலம் சம்பாதித்த வருமானம் எவ்வளவு, அதனால் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன என்பதை கூற முடியுமா என, சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடியில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்