அண்டாக்குள் சிக்கிக்கொண்டு கதறிய சிறுவன் - 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு..

x

தெலங்கானாவில் அலுமினிய அண்டாக்குள் மாட்டிக்கொண்ட சிறுவன் , ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டம் குடிதாண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக், தேவி தம்பதியினருக்கு மூன்று வயது ஆண்குழந்தை உள்ளது.

வீட்டில் விளையாடிக்க்கொண்டிருந்த சிறுவன் நாயக், எதிர்பாரதவிதமாக அண்டாக்குள் சிக்கிக் கொண்டார்.

அலுகை சத்தம் கேட்டு, பெற்றோர் வந்து பார்த்த போது, சிறுவனின் இடுப்பு அண்டாவில் மாட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கட்டரை கொண்டு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்