சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு...மாவட்ட நீதிமன்றத்தில் காவலர் ரேவதி சாட்சியம்

x

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக, மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த காவலரிடம் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த‌து.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி சாட்சியம் அளித்தார்.

அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்