காதலர்களை குறிவைக்கும் சக்கரை வியாபாரி - மிரட்டல் மன்னனை விரட்டி தூக்கிய போலீசார்

x

சேலத்தில் இளம்பெண்ணை மிரட்டி 4 பவுன் நகையை பறித்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காவல் உதவி ஆணையர் ஆனந்தியிடம் புகார் மனு அளித்தார்.

அதில், தனது தந்தையின் நண்பர் எனக் கூறி கொண்டு அறிமுகமான அம்மாபேட்டையை சேர்ந்த சரவணன் என்பவர், தான் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் நின்று கொண்டிருந்த சரவணனைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, சர்க்கரை வியாபாரியான சரவணன், கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் காதலர்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்