புதினை எதிர்த்த 2 ரஷ்யர்கள் இந்தியாவில் அடுத்தடுத்து மரணம் - புதினை விமர்சித்ததால் கொலையா?

உக்ரைன் போரில் விளாடிமீர் புதினை விமர்சனம் செய்த ரஷ்ய எம்.பி. ஒடிசா ஓட்டலில் உயிரிழந்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
x

ரஷ்ய கோடீஸ்வரரும், எம்.பி.யுமான பவெல் அன்டோவ் தனது பிறந்த நாளை கொண்டாட ஒடிசாவுக்கு வந்துள்ளார். நண்பர் விளாடிமீர் பிடினோவ் மற்றும் இருவருடன் வந்தவர், ராயகடா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். கடந்த 21 ஆம் தேதி அவரது நண்பர் விளாடிமீர் பிடினோவ் உயிரிழந்தார். அவர் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தியதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஷ்ய எம்.பி. பவெல் அன்டோவும் ஓட்டலில் 3 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர் மறைவால் அவர் அதிர்ச்சியில் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், உக்ரைன் மீதான போரில் அதிபர் புதின் நடவடிக்கையை விமர்சனம் செய்தவர் ஆவார். ஏற்கனவே புதினை எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில், இந்த இருவரின் மரணங்கள் தொடர்பாகவும் சந்தேகம் எழந்துள்ளது. இது குறித்து ஒடிசா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், இரண்டு ரஷ்யர்களின் மரணத்தில் குற்ற செயல் உள்ளதாக போலீஸ் சொல்லவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்