"இந்திய ராணுவத்தை தாக்க ரூ. 30,000..."; பாக். பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்

x

இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது என பாகிஸ்தான் பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டு பிடித்தது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பயங்கரவாதி பெயர் தபாரக் ஹுசைன் என தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரித்த போது, இந்திய ராணுவம் மீது தற்கொலை தாக்குதலை நடத்த 5 பேர் வந்ததாகவும் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவ கர்னல் யுனுஸ் தங்களை தாக்குதல் நடத்த அனுப்பியதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாயை வழங்கினார் எனவும், இந்திய ராணுவத்தின் 2 நிலைகளை கண்காணித்து வந்ததாகவும் பயங்கரவாதி கூறியிருக்கிறார். இதற்கிடையே குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயங்கரவாதி யிடம் தாங்கள் பேதம் காட்டவில்லை எனவும் அவ ரு க்கு நமது ராணுவ வீரர்கள் 3 பாட்டில் ரத்தம் வழங்கியிருக்கிறார்கள் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்