ஓபிஎஸ் சகோதரர் பேச்சுக்கு எதிர்ப்பு..! திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்... தேனியில் பரபரப்பு

x

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினரான ஓ.பி.எஸ். சகோதரருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். சகோதரரான சண்முகசுந்தரம், சுமார் 45 நிமிடங்கள் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், தாங்களும் பேச வேண்டும் என இடைமறித்தனர்.

மேலும் பெரியகுளத்தில் ரயில் வழித்தடமே இல்லாத நிலையில், ஓடாத ரயிலுக்கு எதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சண்முகசுந்தரத்திடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்