கல்யாணம் முடிந்த கையோடு விருது... “என் Wife வந்த Time எனக்கு Luck“ - பூரித்து போன கணவர்

x

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மணக்கோலத்தில் வந்து ஆட்சியரிடம் விருது பெற்ற ஆட்சியர் அலுவலக ஊழியரை அனைவரும் கைதட்டி உற்சாகப் படுத்தினர். அரசு அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்ட போது, ஆட்சியர் அலுவலகத்தில் ஆடியோ ஆப்பரேட்டராக பணிபுரியும் செல்வமணி தனது மனைவி சவுந்தர்யாவுடன் மணக்கோலத்தில் வந்து ஆட்சியர் பிரதீப் குமாரிடம் விருது பெற்றார். 8 மணிக்கு திருமணத்தை முடித்து விட்டு, இருவரும் தம்பதியாக விழாவுக்கு வந்து விருது பெற்ற மணமக்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.


Next Story

மேலும் செய்திகள்