சைவ ஹோட்டல் பொரியலில் எலி தலை..! அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்..

x

ஆரணியில் சைவ உணவகம் ஒன்றில் வாங்கிச் சென்ற சாப்பாட்டு பொரியலில் எலி தலை இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் சைவ உணவகத்தில், காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர், துக்க நிகழ்வுக்காக மொத்தமாக உணவு வாங்கியுள்ளார். துக்க நிகழ்வுக்கு வந்த 30க்கும் மேற்பட்டோர் உணவு உண்ட நிலையில், பீட்ரூட் பொரியலில் தலை இருந்த‌தாக கூறப்படுகிறது. எலி தலையுடன் முரளியின் உறவினர்கள் ஹோட்டலுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது, 6 மணி நேரத்திற்கு முன்பு உணவு அனுப்பியதாகவும், 6 மணி நேரத்திற்குப் பிறகு எலி தலை இருப்பதாக கூறுவது முறையல்ல என ஊழியர்கள் தெரிவித்த‌தால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார், சமரசம் பேசி, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்காக உணவை எடுத்து சென்றனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட முரளி ஹோட்டல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்