அபராதம் விதித்ததால் ஆத்திரம்.. தர தரவென போலீசை இழுத்து சென்ற நபர் - நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி காட்சி

x

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு போக்குவரத்து காவலர் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் போக்குவரத்து காவலரின் செல்லான் இயந்திரத்தை பறித்து சென்றார். வாகனத்தை மடக்கிய போக்குவரத்து காவலர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் தேடி வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்