ராகுல் காந்தி யாத்திரை - மனம்திறந்த பிரதமர் மோடி

x

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக யாத்திரை மேற்கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாகச் சாடியுள்ளார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சுரேந்திர நகரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் வளர்ச்சி பற்றி பேச வரவேண்டும் என்றும், குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக யாத்திரை மேற்கொள்கிறார்கள் என்று ராகுல் காந்தியின் யாத்திரையை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். முன்பு உயர்கல்வி பயில்வதற்கு வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது மற்ற மாநில இளைஞர்கள் குஜராத் மண்ணில் படித்து வருகிறார்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்