லிப்டில் சிக்கிக்கொண்டதால் ஆத்திரம் - ஆப்ரேட்டரை கன்னத்தில் சரமாரி அறை விட்ட நபர்

x

டெல்லியில் லிப்ட் வேலை செய்யாததால் அதில் சிக்கி கொண்ட நபர், லிப்ட் ஆப்ரேட்டரை கன்னத்தில் பலமுறை அறையும் வீடியோ வெளியாகியுள்ளது. குருகிராமில் உள்ள செக்டார்-50 குடியிருப்பு பகுதியில் ஒருவர் லிப்டில் வந்துள்ளார். லிப்ட் கதவு திறக்காததால், 4 நிமிடங்கள் வரை அந்த நபர் உள்ளே சிக்கியுள்ளார். பின்னர் மற்றொருவரின் உதவியுடன் வெளியே வந்த அந்த நபர் ஆத்திரத்தில் லிப்ட் ஆப்ரேட்டரை தாக்கியுள்ளார். அதன் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், லிப்ட் ஆப்ரேட்டரை தாக்கிவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்