புல்லட் வேகத்தில் பாய்ந்த ரபாடாவின் பந்துகள்.. - நிலைகுலைந்து போன இங்கிலாந்து வீரர்கள்..!

x

புல்லட் வேகத்தில் பாய்ந்த ரபாடாவின் பந்துகள்.. - நிலைகுலைந்து போன இங்கிலாந்து வீரர்கள்..!


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து தங்கள் முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்து உள்ளது. மார்கோ ஜேன்சன் 41 ரன்களுடனும், ரபாடா 3 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று மதியம் தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்