தேநீர் விருந்து புறக்கணிப்பு.."அதிகாரம் இருக்கு.. ஆக்‌ஷன் எடுத்திருப்பேன்"-ஆளுநர் தமிழிசை காட்டம்..!

x

குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கிய தேனீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பங்கு பெற்றவர்களுக்கு சிறுதானிய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இந்த தேநீர் விருந்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அரசியலமைப்பு சட்ட மீறலை தெலுங்கானா அரசு செய்துள்ளது என புகார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்