குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் - குற்றவாளிகளை நெருங்கிய சிபிசிஐடி போலீசார்

x

புதுக்கோட்டை அருகே குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 2 பேர் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல், இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஊராட்சித் மன்ற தலைவர் முத்தையா, புதுக்கோட்டையில் பயிற்சி காவலராக பணியாற்றும் முரளிராஜா உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் 2 பேர் திருச்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்