"காசிமேடு மீனவர்கள் சங்கத் தேர்தலை நிறுத்திய போலீசார்"

x

மீனவர் சங்கத் தேர்தலை போலீசார் மூலம் எம்.எல்.ஏ. நிறுத்துவது நியாயமில்லை என காசிமேடு மீனவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் சென்னை-செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தேர்தல் நடத்தும் ஏற்பாடு செய்தனர். வரும் 14ஆம் தேதி சங்கத் தேர்தல் நடத்த திட்டமிட்ட நிலையில், வேட்புமனு வழங்கப்பட்டது. இதனிடையே, அங்குவந்த போலீசார், சங்கத் தேர்தலை நடத்தக் கூடாது என நிறுத்தியுள்ளனர்.


முறையான காரணம் இன்றி தேர்தலை நிறுத்துவதாக கேள்வி எழுப்பிய நிலையில், எம்.எல்.ஏ. எபினேசரை அழைக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே, சங்கத் தேர்தலுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் தொடர்பில்லை என கூறிய மீனவர் சங்கத்தினர், போலீசார் மூலம் தேர்தலை தடுப்பது தவறானது எனக் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்