கடத்தப்பட்ட சிறுமியை 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - விசாரணையில் வெளியான 'திடுக்' தகவல்

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 16 சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் நல்லகண்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, அவரது சகோதரியின் கணவர், தனது உறவினருக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தோடு கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் 8 மணி நேரத்தில் சிறுமி மீட்டக்கப்பட்டார்.

மேலும், சிறுமியை கடத்திய ராமசாமி என்பரை கைது செய்த போலீசார், தப்பியோடிய பிற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்