விஷம் குடித்த துணை நடிகை திவ்யபாரதி - மருத்துவமனையிலிருந்து திடீர் மாயம்
திண்டுக்கல் அருகே, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த துணை நடிகை திவ்யபாரதி, மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, யூடியூப் சேனல் நடத்தி வரும் பகலவன் என்பவர் திவ்யபாரதி மீது புகார் அளித்திருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திவ்யபாரதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து திவ்யபாரதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பகலவன் ஆடியோ ஒன்றினை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
அதனைக் கேட்ட திவ்யபாரதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story