குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்; உருண்டு உருண்டு குளிக்கும் இளைஞர்

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்; உருண்டு உருண்டு குளிக்கும் இளைஞர்
x

சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரில், இளைஞர் ஒருவர் குளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. சேர்ந்தமரம் கிராமத்தில், தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, ஒரு மாதத்துக்கும் மேலாக சாலையில் தண்ணீர் செல்கிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், வீணாக செல்லும் தண்ணீரில் குளித்து எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்