"பெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் சமத்துவம் கொண்டது" | கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

x

பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகள், நாட்டின் முன்னேற்றத்திற்கு சமத்துவத்திற்கும் வழி வகுக்கும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த சித்தராமையா, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தான், பெரியார் சுதந்திர போராளி என்றும், அவரின் கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றமடைய செய்யும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்