பெரம்பூர் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்... கர்நாடகாவை சேர்ந்த இருவரிடம் தீவிர விசாரணை

x

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் 20 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாதன் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திராவில் உள்ள வங்கி ஒன்றின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற வழக்கில் சிறை சென்றவர்கள். இதன்பின்னர், இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவருக்கும் தொடர்பிருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்