அடகு கடையில் கைவரிசை காட்டிய பெண்... போலி நகை வைத்து பணத்தோடு ஓட்டம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி...

x
  • சென்னை பெரம்பூரில், போலி நகைகளை அடமானம் வைத்து, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சுருட்டிச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
  • பட்டேல் ரோடு பகுதியில் கன்னையா என்பவரின் அடகு கடையில் வந்த பெண்மணி ஒருவர், தனது தங்கச் செயினில் இருக்கும் குண்டு மணிகளை கொடுத்து, பணம் கேட்டுள்ளார்.
  • அந்த நகைகளுக்கு கடை உரிமையாளர் 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
  • பின்னர் நகைகளை பரிசோதனை செய்தபோது, அவை போலி என தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்