"அமைச்சர்கள் ஏளனம் செய்வதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்"... ஆர் பி உதயகுமார் பேட்டி

x

வங்கியை கொள்ளை போன்ற சம்பவங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தினையொட்டி, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரையில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை வல்லரசாக்க பிரதமர் மோடி உழைத்து வருவதாக தெரிவித்தார். அதிகளவில் இருக்கும் போதைப்பொருள் பழக்கத்தை, அரசு போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பட்டப்பகலில் வங்கியை கொள்ளையடிக்கப்படுவது போன்ற சம்பவங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென கூறிய அவர், குறைகளை சுட்டிக்காட்டும்போது அமைச்சர்கள் ஏகடியம் செய்வதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்