ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் பயமறியாமல் குழந்தைகளுடன் இறங்கி செல்ஃபி எடுக்கும் மக்கள்

x

கோவை மாவட்டம் ஆழியாறு அணை பகுதியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகளால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், ஆழியாறு அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியில், 118 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. இதன் காரணமாக,11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை காண குவிந்து வரும் சுற்றுலா பயணிகள், உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதிக்கு தடையை மீறி சென்று செல்ஃபி எடுத்து வருகின்றனர். தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுப்பணித்துறையினர் எச்சரித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்