நள்ளிரவில் திமுக MLA வீட்டை முற்றுகையிட்ட மக்கள் - திருப்பத்தூரில் திடீர் பரபரப்பு

x

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து பாமக எம்எல்ஏ ஆசி பெற்ற சம்பவம், பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம், மகுடஞ்சாவடியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பாமகவைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு வந்த அருள் மேடையில் ஏறியதும், எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த சம்பவம், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்