பாக். சிறையில் இந்திய கைதிகளின் மரணம் அதிகரிப்பு - விடுதலை செய்ய பாக். அரசுக்கு வலியுறுத்தல்

x

மியான்மரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை என்ற அவர், மற்றவர்களையும் மீட்க முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.

கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தான் காவலில் இருந்த 6 இந்தியர்கள் இறந்துள்ளதாக வேதனை தெரிவித்த அரிந்தம் பாக்சி, தண்டனை காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த்தாகவும் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்