முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

x

தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கு நடவடிக்கையில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசு தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்