"அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு..." - பகீர் போஸ்டர்... ஆடிப்போன மதுரை

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியதாக மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தமும் கட்சியினரை சூடேற்றிவிட்டுள்ளது. மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளரான மிசா செந்தில் அடித்துள்ள போஸ்டர் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இதில், அதிமுகவில் இருந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அதிமுகவில் பரபரப்பை கூட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்