'ஆபரேஷன் கந்துவட்டி' - அதிரடி நடவடிக்கையால் சிக்கிய பெண்... தஞ்சையில் பரபரப்பு

x

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டீஸ்வரம் அருகே உள்ள ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஐயப்பன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன்வாங்கி, 60 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி உள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில், அய்யப்பன் கைது செய்யப்பட்டார். இ​தேபோல், மாதாக்கோட்டை வெற்றி நகரை சேர்ந்த மல்லிகா என்பவரும் கந்துவட்டிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்