இந்நாள் காதலனின் சந்தேகத்திற்கு தூபம் போட்ட முன்னாள் காதலன்-சுயரூபம் புரிந்ததால் காதலி விபரீத முடிவு

x

கன்னியாகுமரி அருகே காதல் தொல்லையால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இந்நாள் காதலனை கைது செய்த போலீசார், முன்னாள் காதலனை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் 20 வயதான திவ்யா. இவர் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ரஞ்சித் வேலைக்கு செல்லாததால் வெறுப்படைந்த திவ்யா, அவருடனான தொடர்பை துண்டித்துள்ளார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த செரின்புரூஸ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திவ்யா மீது சந்தேக பார்வை கொண்ட செரின்புரூஸ், முதல் காதலனை தொடர்புபடுத்தி, அடிக்கடி திவ்யாவை திட்டியதாக தெரிகிறது. அதேபோல தன்னுடனான காதலை துண்டித்ததால், ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் ரஞ்சித், திவ்யாவுடன் சேர்ந்து இருப்பது போன்ற படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் காதலனின் தொல்லை தாங்க முடியாததால் மனமுடைந்த திவ்யா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது காதலனை கைது செய்த போலீசார், முதல் காதலன் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்