தள்ளுமுள்ளுவில் நடந்த விபரீதம்.. பேருந்து டயரில் குப்புற விழுந்த முதியவர் - பதைபதைக்கும் சம்பவம்

x

மதுபோதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.

குழித்துறை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்த முதியவர் முத்தையன். இவரும் பிரஜித் என்ற வாலிபரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

பின்னர் இருவருக்கும் இடையே சாலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முதியவர் நிலை தடுமாறி அரசுப்பேருந்தின் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

. இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரஜித்தை காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்றது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்