சிவப்பு நிற ஆடையை அசைத்து ஓடும் ரயிலை நிறுத்திய மூதாட்டி - பெரும் விபத்தை தடுத்த சிங்கப்பெண்

x

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மந்தாரா ரயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்த நிலையில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாதூர்யமாக செயல்பட்ட மூதாட்டியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற ஆடை ஒன்றை எடுத்து வந்து, தண்டவாளத்தில் நின்று ரயில் வரும் சமயத்தில் சமயோசிதமாக அசைத்துள்ளார் மூதாட்டி சந்திராவதி. இதையடுத்து ஆபத்து இருப்பதை உணர்ந்து ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நிகழ்விடம் வந்த ரயில்வே ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரயில் விபத்தைத் தடுத்த மூதாட்டி சந்திராவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்