விவசாயிடம் அதிகாரி லஞ்ச பேரம்..!

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, விவசாய நிலத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை இடமாற்றம் செய்ய, மின் இளநிலை பொறியாளர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. சூனாம்பேடு பகுதியை சேர்ந்த விவசாயி ராஜகோபால் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக, மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்துறையை நாடியுள்ளார். அப்போது மின்துறை இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவர், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சப் பணம் 15 ஆயிரமா 25 ஆயிரமா என இருவரும் பேரம் பேசும் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து அந்த விவசாயி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்