ஈரோட்டில் என்ஐஏ திடீர் சோதனை... தீவிரவாதிகள் பதுங்கியிருந்தார்களா?

ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி, விசாரணையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x

மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், 2 இளைஞர்களை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த அப்துல் அலி ஜூபா அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் நாளை தமிழகம் வரும் நிலையில், என்ஐஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்