"புதிய கல்விக்கொள்கையால்தான் இலக்கை அடைய முடியும்" - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

x

புதிய கல்விகொள்கை புரட்சிகரமானது என்றும், அறியாமையின் காரணமாக சிலர் அதை எதிர்ப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்..

சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் கல்வி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் எதுவும் இல்லை என்றார்.

மேலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை புரட்சிகரமானது என்றும், சிலர் அறியாமையால் புதிய கல்விகொள்கையை எதிர்த்து வருகின்றனர் என்றார்.

புதிய கல்விக்கொள்கையை செல்படுத்தினால் மட்டுமே, இந்தியா இலக்கை அடையமுடியும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்..


Next Story

மேலும் செய்திகள்