அத்துமீறி சேட்டை செய்த பள்ளி தாளாளர்..! - போராட்டத்தில் குதித்த மாணவிகள்..! திடீரென திரண்ட இஸ்லாமிய அமைப்புகள்

x

நெல்லையில் பள்ளி தாளாளர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, சக மாணவிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

நெல்லை மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பெரும்பாலும் அங்கு, இஸ்லாமிய மாணவிகளே அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் தாளாளராக இருக்கும் குதுபுன் நஜீப் என்பவர், 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சக மாணவிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்