"இறந்த என் பொண்ண உயிரோடு இருக்குறதா சொல்லி உடலை கொடுத்து அனுப்பிட்டாங்க"- கண்ணீர் வடிய பேசிய தந்தை

x

விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதுப்பட்டியை சேர்ந்த ராம்குமாரின் மனைவி அரங்க நாயகி, பிரசவ வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிறந்த பெண் குழந்தை, சிறிது நேரத்திலே உயிரிழந்தது. இதையடுத்து, தாயின் உடல்நிலையும் மோசமானதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தாய் அரங்கநாயகியும் உயிரிழந்தார்.

இதையடுத்து, தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்