தெரியாமல் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட பாஜக மாஜி நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்

x

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி தனசேகர், தனது வீட்டு அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த சிலர், தங்களை கஞ்சா விற்பதாக, முகநூலில் காட்டியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றி, ஆயுதங்களால் தாக்கியதில், தனசேகர் காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் செங்கல்பட்டு எஸ்பி பிரதிப் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அங்கு 100 - க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கஞ்சா போதை ஆசாமியிடம் பேசி தனசேகர் வீடியோ வெளியிட்டதே இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்