டிராபிக் போலீசை காரோடு 4 கிமீ தூரம் கதற கதற தூக்கிச்சென்ற வாகன ஓட்டி - "ஆனாலும் இவ்ளோ கோவம் ஆகாது"

x

அபராதம் விதித்த காவலரை கார் பேனட்டில் உட்கார, அப்படியே 4 கிமீ தொலைவுக்கு காரை ஓட்டிச்சென்று இருக்கிறார், ஒரு மத்தியப்பிரதேச ஓட்டுநர்.மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் செஃபோன் பேசியபடி ஒருவர் காரை ஓட்டிச்சென்றபோது, போக்குவரத்து காவலர் சிவ்சிங் சௌகான் என்பவர் மறித்துள்ளார். கையோடு அபராதமும் விதித்து ரசீதையும் கொடுத்துள்ளார். அதை அந்த ஓட்டுநர் வாங்க மறுக்கவே... காரின் பேனட்டில் ஏறி போலீஸ்காரர் உட்கார்ந்துவிட்டார். சளைக்காத ஓட்டுநர் அப்படியே நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு காரை ஓட்டிச்சென்றார். மற்ற காவலர்கள் சென்றே சக காவலரை மீட்டனர்.

விசாரணையில், கார் ஒட்டுநர், அதே மாநிலத்தின் குவாலியரைச் சேர்ந்த கேசவ் உபாத்யாய் என்பது தெரியவந்தது. வழக்கு பதியப்பட்டு, அவரிடமிருந்து கைத்துப்பாக்கியும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்