குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் உயிரிழப்பு - சென்னை கொளத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை கொளத்தூரில் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் உயிரிழந்ததை அடுத்து, பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனை மீது கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மனைவி சந்தான லட்சுமிக்கு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 13-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரத்தில், சந்தான லட்சுமிக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், ஆம்புலன்ஸில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சந்தானலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்து, கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கை திருமங்கலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றியுள்ளனர்.

திருமங்கலம் கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்